திருநெல்வேலி | விடுதியில் நர்சிங் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை.! காரணம்.? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் கிதோரின் ஸ்மைலா நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கிதோரின் ஸ்மைலா, திடீரென இன்று காலை விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மாணவி கிதோரின் ஸ்மைலா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nursing college girl committed suicide in tirunelveli


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->