குடும்ப தகராற்றால் மகளை கொன்று செவிலியர் தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


குடும்பதகராற்றால் மகளுடன் செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்,  பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். சம்பவதன்று, தனது மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷமருந்தி மயங்கி கிடந்துள்ளார்.

அவர்களை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  குழந்தை உயிரிழந்த நிலையில் சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமதியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனr.

முதற்கட்ட விசாரணையில் சுமதிக்கும் அவரது கணவர் மாடசாமிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர். சம்பவதன்று, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nurse Committed Suicide in Thirunelveli


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->