முடங்கிய சுற்றுலா! நீலகிரியில் தவிக்கும் 10000த்திற்கும் மேற்பட்டோர்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் கோடை காலங்களில் சுற்றுலா என்பது மிக முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட குளிர் பிரதேசமான நீலகிரியினை நோக்கி உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்த சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்டு அங்கு ஏராளமான தங்கும் விடுதிகளும் இயங்கி வருகின்றன. சுமார் 1500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்றன. தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கும் விடுதிகள் அனைத்தும் முழுவதுமாக காலியாகவே இருக்கிறது. 

இதனால் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக தங்கும் விடுதியின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தங்கும் விடுதிகளை சார்ந்து இருக்கும் தூய்மைப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், வரவேற்பார்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் முடங்கிப் போயுள்ளது கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த வருடம் பாதிக்கப்பட்ட அவர்கள் இந்த வருடமும் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgris hotel employees and owners suffered by corona curfew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->