தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு! என்ஐஏவிடம் சிக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியே இல்லை என மறுக்கும் நிர்வாகிகள்! 

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சாலையில் அமைந்துள்ள மன்னர் துறை சிங்கம் கல்லூரி எதிரில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்று வந்ததாகவும் அங்கு தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்தான தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் மூன்று பேர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விக்னேஸ்வரன் நாம் தமிழர் கட்சி சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மறுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத விக்னேஸ்வரன் எப்படி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என கூற முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் அவரைப் பற்றி மாவட்ட அளவில் விசாரித்து வருவதாக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA raid in NTK member house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->