#JUSTIN || தமிழகத்தில் களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் - 10 இடங்களில் சோதனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் - 10 இடங்களில் சோதனை.!!

சமீபகாலமாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் தமிழகத்தில் பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை ,தேனி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிலும், குறிப்பாக தேனி கம்பம் பகுதியில் SDPI அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் சாதிக் அலி தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் படி அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NIA officers raid ten places in tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->