பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் - நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் புதிய படிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக 'தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன்' இணைந்து பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரியில் 'மின்சார வாகன தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 59 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மின்னியல் மற்றும் ஆட்டோமொபைல் துறை விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மேலும், சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஓ.ஜி. தரணிபதி, மின்னியல் துறையின் தலைவர் பி.தினகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரை உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new syllabus add to pollytechnic college


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->