தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.? வெளியான உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வகை தொற்று பரவ காரணமாக நேற்று முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. 

இதுகுறித்து சென்னை மாநகர செய்திக்குறிப்பில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை கடற்கரை மணல் பரப்பில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலை ஓரம் உள்ள பிரத்யேக நடைபாதையில் மட்டுமே நடைப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 

மணல் பரப்பில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new restrictions in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->