ஆசை 60 நாட்கள்.. மோகம்..... நகை மீதிருந்த மோகத்தால், துடிதுடிக்க காதல் திருமண பெண்மணிக்கு அரங்கேறிய கொடூரம்.!!
new married wife murder attempt by husband due to dowry in Tindivanam Viluppuram
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பரங்னி பகுதியைச் சார்ந்தவர் ஜீவா (வயது 21). நைனார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக ஜீவா தனது காதலி ராஜேஸ்வரியை சந்திக்க இயலாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி ராஜேஸ்வரியை காதல் திருமணம் செய்துள்ளார். கடந்த 3 ஆம் தேதியன்று ராஜேஸ்வரி வீட்டில் தீ குளித்து தற்கொலை செய்ததாக கூறி, சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார் என்ற தகவலை காவல் துறையினர் அறிந்துள்ளனர்.
மேலும் பெண் வீட்டாரிடம் ராஜேஸ்வரி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறிய நிலையில், ஜீவா தானே சென்று காப்பாற்றியதாகவும் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நேரத்தில், பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய ராஜேஸ்வரி, தனது வாக்குமூலத்தில் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஸ்வரியும் - ஜீவாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பெண் வீட்டார் வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை என்று தெரியவருகிறது. தற்போது வேலை இன்மை காரணமாக தவித்து வந்த ஜீவா, தனது காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு வாங்கி வரச்சொல்லி அடிக்கடி சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
கடந்த 3 ஆம் தேதியன்று வழக்கம்போல இவர்களுக்குள் வரதட்சனை சண்டை ஏற்படவே, ஆத்திரமடைந்த காதல் கணவர் ஜீவா, மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும், இதுதொடர்பாக வீட்டில் சொன்னால் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை கொன்று விடுவேன் என்றும் ஜீவா மிரட்டியதாக ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, காதல் மனைவியை உயிருடன் தீவைத்து எரித்துக் கொலை செய்ய முயன்ற ஜீவாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
new married wife murder attempt by husband due to dowry in Tindivanam Viluppuram