திருமணமான 3 நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் திருமணமான 3 நாளில் புது மாப்பிள்ளை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கார் டிரைவர் மணிகண்டன் (21). இவருக்கும், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் சோபனாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.

இதையடுத்து, மணிகண்டன் அங்கிருந்து நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு மாமியார் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது புல்லா அவென்யூ அருகே, மணிகண்டன் வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மழைகண்டனை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New groom dies in motorcycle accident in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->