தமிழகத்தில் புதிதாக இந்த 4 ஊர்களில் விமான நிலையம்.! சற்றுமுன் அறிவித்த மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் புரி அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை இன்று விமான போக்குவரத்து அமைச்சர் புரி 'தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்துள்ளார்.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் கண்டனம் வெளியிட்டார்.

அவரை தொடர்ந்து திமுக எம்.பி. திருச்சி சிவா, "கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று பேசினார்.

பின்னர், தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர் புரி 'தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new 4 airport in tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->