நெல்லையில் பயங்கரம்! புத்தக பையில் ஆயுதங்கள் - மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பள்ளிக்கு ஆயுதம் எடுத்து சென்ற விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடைய மாணவன் ஒருவர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், ஏற்கனவே ஒரு மாணவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிப்பு: 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத்தேர்வு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், அக்டோபர் ஏழாம் தேதி தான் திறக்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம் தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai School Students TNPolice 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->