நெல்லை || பேருந்துக்குள் இளம்பெண் சத்தம்., தர்ம அடி வாங்கிய போதை ஆசாமி - வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சக பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கி, போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இது குறித்த காணொளியில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறிய மணிகண்டன் என்பவர், சக பெண் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் அவரை கடுமையாக திட்டியதுடன், அவரை கடுமையாக தாக்கினார்.

மேலும் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், மணிகண்டனை ஒப்படைத்தார்.

மணிகண்டன் மது போதையில் இருந்ததாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai bus stand incident nakakovil bus


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->