மயிலாடுதுறையை உலுக்கிய அலட்சியம்...! ஓட்டுநரின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதமா...? பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி...
negligence that shook Mayiladuthurai Was tragedy caused by driver carelessness child died after being trapped under wheels school van
மயிலாடுதுறையில் பள்ளி வேன் தொடர்பான துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1½ வயது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மயிலாடுதுறை கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அரசி.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும், 1½ வயதான மகன் மகிழ்வேந்தனும் உள்ளனர். மகள்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் அரசி தனது மகள்களை பள்ளி வேனில் ஏற்றிச் செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது தனது இளைய மகன் மகிழ்வேந்தனையும் உடன் அழைத்து வந்திருந்தார். மகள்களை வேனில் ஏற்றும் அவசரத்தில், மகிழ்வேந்தனை அருகில் கீழே நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், குழந்தை வேனின் அருகில் இருப்பதை கவனிக்காமல் டிரைவர் வாகனத்தை இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக வேனின் பின்சக்கரத்தில் சிக்கிய மகிழ்வேந்தன் பலத்த காயமடைந்தான்.
மேலும், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகிழ்வேந்தன் பரிதாபமாக உயிரிழந்தான்.இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோபாலசமுத்திரம் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
negligence that shook Mayiladuthurai Was tragedy caused by driver carelessness child died after being trapped under wheels school van