திருச்சி || லாரி மோதியதால் வாலிபர் உயிரிழப்பு.! தங்கை படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் திருவாசி அருகே உள்ள மான்பிடி மங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பிரசன்னா மற்றும் மகள் மோனிகா. 

இவர்கள் இரண்டு பேரும் வேலைசம்மந்தமாக இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சி ஓயாமரி சுடுகாட்டு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்புறம் வந்த டிப்பர் லாரி எதிர்பாரத விதமாக இரு சக்கர வாகனத்தின் பின் புறம் மோதியது. 

இந்த விபத்தில் பிரசன்னா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, பிரசன்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தங்கை மோனிகா லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார். 

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி, டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy bike accident young man died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->