பண்ருட்டி : இருசக்கரவாகனம் மோதியதில் உயிரிழந்த முதியவர் பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் இருசக்கர வாகனத்தில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுப்பிரமணியன் சென்ற இருசக்கரவாகனத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சுப்பிரமணியனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near pandrutti old man died for bike accident


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->