விடுமுறைக்கு சென்ற மாணவன்.! மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூரை அடுத்த நத்தப்பாளையம் பகுதியை சோ்ந்தவர் பாலமுருகன். இவர் மகன் செல்வகுமாா். இவா் நத்தப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருக்கிறார்.

தற்போது பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் செல்வகுமார் காங்கயம் சக்தி நகா் அருகே உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு செல்வகுமார் தன் நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தாா். 

அப்போது வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை தெரியாதனமாக தொட்டுள்ளாா். அதனால், அவரது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து  அதே இடத்திலேயே மயங்கி விழுந்தாா். 

இதைப்பார்த்த உறவினர்கள் செல்வகுமாரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் செல்வகுமாா் உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது குறித்து காங்கயம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kangeyam school student died for electric shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->