திருச்சி அருகே கோர விபத்து || இரு பெண்கள் பலி., 9 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே மினி சரக்கு வாகனம் மீது, மணல் லாரி மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி கல்லணை அருகே மணல் லாரி மோதியதில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

கும்பகோணத்திலிருந்து உறவினர்கள் 11 பேருடன் மணப்பாறை அடுத்து உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு மேனி டெம்போ சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது, கல்லணை அருகே எதிர்திசையில் வந்த மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kallanai lorry mini tembo accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->