கோயம்புத்தூர் : அண்ணன் தம்பி சண்டையில் மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே மோத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ்-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சதீஸ்குமார், தினேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில், மீண்டும் இருவருக்கிடையே கடந்த 3-ந் தேதி மதியம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சில நேரத்தில் தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார் சித்ரா சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை.

இதில், ஆத்திரமடைந்த சித்ரா கீழே இருந்த கட்டையை எடுத்து இரண்டு பேரையும் தாக்கியுள்ளார். இதனால், சதீஷ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிதுள்ளனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அடிதடி வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்குமார் இறந்ததால், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near coimbatore man died mother attack in brothers fight


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->