கணவரை பிரிந்த வருத்தத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு.!  - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள எண்ணூரில் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவானி பிரியா. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பவானி பிரியா கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

கணவரை பிரிந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவானி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai woman sucide for husband seperated


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->