இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மனைவி..! கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனாவரம் என்.எம்.கே.தெருவை சேர்ந்தவர் சாலமன் ஈஸ்வரி தம்பதிகள். இவர்களில் சாலமன் எலெக்ட்ரிசியன் வேலையும், ஈஸ்வரி வீட்டு வேலையும் செய்து வருகிறார்கள். 

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், ஈஸ்வரி தனக்கு தெரிந்த ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி வெளியிட்டு உரையாடி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதைக்கண்டு, கோபமடைந்த சாலமன் ஈஸ்வரியை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சாலமன் வீட்டிலிருந்த கத்தியால் ஈஸ்வரியின் கை மற்றும் தலை பகுதியை தாக்கியுள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்ட ஈஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார். இது குறித்த அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் சாலமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai husband kill wife for publish vedio on instagram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->