தொழில் சம்பந்தமாக காரில் சென்னை வந்த பெண் - லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நாகபட்டின மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் வினோபாரதி. இவர் தலைவாசல் பகுதியில் கியாஸ் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிரத்தினம் என்பவரும் தொழில் சம்பந்தமாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். 

இதையடுத்து இவர்கள் பட்டாளம் தபால்மேடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் சென்றது. அப்போது எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியின் மீது மோதியது. 

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியதால் வினோ பாரதியும் மணிரத்தினமும்  இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். 

அதன் படி, போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu two peoples died in car accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->