ஆன்லைனில் விஷம்.! கல்லூரி மாணவன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருபத்தொன்று வயதுடைய நிகில் என்ற மாணவன் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் நிகில் கல்லூரி விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் அளித்தனர். பின்னர் வந்து பார்த்த கல்லூரி நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். 

மேலும், மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவன் நிகில் தற்கொலை செய்வதற்காக ஆன்லைனில் விஷம் வாங்கியது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu private college student sucide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->