வீட்டு வேலை செய்ய சொல்லி கண்டித்த தாய்.! மகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செட்டி புண்ணியம் அருகே வடகால் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ஹரிணி. இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில், ஹரிணி கடந்த 20-ந்தேதி வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததால் அவரை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி ஹரிணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கொக்கு மருந்தை சாப்பிட்டுள்ளார். 

சிறிது நேரத்திலேயே மாணவி ஹரிணி வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டுக் காரர் ஹரிணியை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும், அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chengalpattu daughter sucide for mother scolded


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->