ஆவடி அருகே ரெயில் முன் பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. திருமணமாகாத இவர் பரங்கிமலையில் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் ஸ்ரீபிரியா இன்று காலை ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரெயில் மோதி உடல் சிதறிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி, ஆவடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீபிரியா இன்று காலை சுமார் 10 மணியளவில் தண்டவாளம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பாய்ந்ததை பயணிகள் சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம், அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பணி செய்த இடத்தில் ஏதேனும் நெருக்கடி இருந்ததா? அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று பல கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near avadi woman police sucide in train


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->