சுகந்திர தின கொண்டாட்டம் || நடுகடலில் தேசிய கொடி ஏற்றிய நாகை மீனவர்கள்..!
Nagai Fishermans Hoisted flag in the sea
நடுகடலில் தேசிய கொடியை ஏற்றி நாகை மீனவர்கள் சுகந்திர தினத்தை கொண்டாடினர்.
நாட்டின் 75 வது சுகந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் தேசிய கொடிகளை ஏற்றி சுகந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் அதிகாலையில் நடுகடலுக்கு சென்றனர்.

அங்கு 25 அடி உயரமுள்ள கொடிகம்பத்தை நடுகடலில் மிதிக்கவிட்ட அவர்கள் படகில் இருந்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து வந்தே மாதரம் கோஷமிட்டும் பட்டாசு வெடித்தும் சுகந்திர தினவிழாவை கொண்டாடினர். நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவர்கள் பலர் தேசிய கொடியேற்றி சுகந்திர தினவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
English Summary
Nagai Fishermans Hoisted flag in the sea