திருவண்ணாமலையில் பெண்களை வசியம் செய்து பணம் பறிக்கும் மர்ம ஆசாமிகள்.! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் இளம்பெண்கள் பணி செய்யும் கடைகளை நோட்டமிட்டு, போலி ஜோதிடர் இருவர், பெண்களை வசியம் செய்து பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை, செய்யாறு அருகே காந்தி மூட்டுவலி மெடிக்கலுக்கு காவி வேட்டி அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதுபோல வந்த 2 மர்ம நபர்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது அந்த பெண்கள் பத்து ரூபாய் அவர்களுக்கு கொடுத்துள்ளனர். அதை வாங்க மறுத்த மர்ம ஆசாமிகள் இருவரும், உங்களின் வருமானத்தை அதிகம் செய்வதாக கூறி, அந்த பெண்களை பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இரண்டு பெண்களும் திடீரென சுய நினைவிழந்து கல்லாப்பெட்டியில் இருந்த 1,500 ரூபாயை எடுத்து அந்த மந்திரவாதிகளிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் அந்த மந்திரவாதிகள் இருவரும் பணத்துடன் வெளியே செல்கின்றனர். சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண் ஊழியர்கள் இருவரும் சுய நினைவுக்கு வந்து, நடந்த அனைத்தையும் உணர்ந்துள்ளனர்.

இது குறித்த இந்த சிசிடிவி காட்சிகளை அந்த மெடிக்கல் கடையின் உரிமையாளர் வெளியிட்டு பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious Assamese seduce women in Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->