மோட்டார் சைக்கிள் மீது தனியார் கம்பெனி பேருந்து மோதி விபத்து - இளைஞர் பலி - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் கம்பெனி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தை சேர்ந்த ஜீவகன் என்பவரின் மகன் ராகுல்(21). இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார்(22) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது வடபூண்டிபட்டி கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த சிப்காட் கம்பெனி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து செய்யாறு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle private company bus accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->