மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து.! விவசாயி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் எஸ்.பி.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பராம ராஜூ(52). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கேசவலு என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் சுப்பராம ராஜூ லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த கேசலுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->