ஆற்றில் குளிக்க சென்ற தாய் மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


ஆற்றில் குளிக்கச் சென்ற தாய் மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், நென்மேனி  பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு திருமணமாகி கேசவன் மற்றும் பூர்ண கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.

 அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் சிக்கி கொண்டார். இதனைக் கண்ட மற்ற இருவரும் அவரை காப்பாற்ற மிதி செய்தனர் அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவரள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother's sons drown in river


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->