தாய் மகன்கள் படுகொலை.. மர்ம நபருக்கு வலைவீச்சு.. திருப்பூரில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


தாய் மற்றும் இரு மகன்கள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனது இரு மகன்களுடன் குடியேறியுள்ளார். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அந்த நபரை ஒரு தகராறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்க்க தாய் மற்றும் மகன்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும் கொலைக்கான காரணம் என்பது என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and Sons Murder


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->