#செங்கல்பட்டு || மகன் இறந்த துக்கத்தில் அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்..!
Mother and Son Death in Chengalpattu
மகன் இறந்த துக்கத்தில் தாயும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ஜெ.ஜெ. நகர், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஜெய்கணேஷ் (15), தருண் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். சம்பவதன்று இருவரும் விளையாடி கொண்டிருந்த போது திடீரென ஜெய்கணேஷ் தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகனின் உடலை பார்த்த அவர் கதறி அழுது மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்கு சென்றனர்.
அங்கு சாந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய், மகன் இருவரின் உடல்களையும் சிங்கப்பெருமாள் சுடுகாட்டில் ஒன்றாக வைத்து எரியூட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother and Son Death in Chengalpattu