விழுப்புரத்தில் பகீர் சம்பவம்; பிறந்து 24 மணிநேரம் கூடாத பச்சிளம் குழந்தை உயிருடன் புதைத்து கொலை; தாய், கள்ளக்காதலன் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே பச்சிளம் குழந்தையை ஏரியில் உள்ள சேற்றில் புதைத்து கொன்று விட்டு நாடகமாடிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் எலக்ட்ரிஷனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (30). இவர்களுக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான்காவதாக கர்ப்பமடைந்த சுதா பிரசவத்திற்கு கடந்த 07-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அன்றே அவருக்கு 02 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்துளைத்து.

ஆனால், மருத்துவமனையில் இருந்து சுதா திடீரென்று குழந்தையுடன் மாயமாகியுள்ளார். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சுதாவின் சொந்த கிராமத்திற்கு சென்று கிராம செவிலியர் மூலம் விசாரித்துள்ளனர். அப்போது சுதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் குழந்தை எங்கே என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர், மருத்துவமனையில் இருந்து வரும் வழியில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதால், குழந்தையை புதைத்து விட்டதாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், காணை பகுதியில் உடலை புதைத்ததாகவும் கூறியுள்ளார். 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை சுதாவிடம் குழந்தையை புதைத்த இடத்தை காட்டுமாறு கேட்டும் சரியாக கூறவில்லை. மாறாக எரித்து விட்டதாகவும், சாலையோரம் வீசிவிட்டதாகவும், ஒருவரிடம் கொடுத்து விட்டதாகவும் அவர் முன்னுக்குப்பின் முரணாகவே போலீசாரை அழைக்கழித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனை மற்றும் காணை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், சுதாவை குழந்தையுடன் வாலிபர் ஒருவர் பைக்கில் அழைத்து செல்வது பதிவாகியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.  இதுகுறித்து சுதாவிடம் விசாரித்ததில், காணை குப்பத்தை சேர்ந்த ஆர்ட்டிஸ்ட் வேலை செய்து வரும் திருமணமாகி 02 குழந்தைகள் உள்ள கோகலிங்கம் (39) என்பது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து சுதாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளனர். இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது;

சுதாவின் கணவர் சென்னையில் வேலை செய்து வருகிறதாகவும், வீட்டில் தனியாக வசித்த சுதா தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது, யோகலிங்கமும் தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் சுதா கர்ப்பமாகியுள்ளார். 

இதனால் 05 மாதத்தில் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கருவை கலைக்க இருவரும் சென்றுள்ளனர். அங்கு கருவை கலைக்க மறுப்பு தெரிவித்ததால், சுதா தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்த சூழல், கடந்த 07-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது உறவினர்களிடம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு, ஆட்டோவில் வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த யோகலிங்கம் காலை 11.20 மணிக்கு விழுப்புரம் அரசு மருத்தவமனையில் சுதாவை தனது மனைவி எனக் கூறி சேர்த்துள்ளார். 

அத்துடன், 11.35 மணிக்கு சுதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் அவமானமாக இருக்கும் என கருதிய சுதா, யோகலிங்கத்திற்கு அன்றிரவு 07.30 மணியளவில் மொபைல் போனில் அழைத்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யாமல் குழந்தையை துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு இருவரும், பைக்கில் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் காணை அடுத்த அகரம் சித்தாமூர் ஏரியில் குழந்தையை உயிருடன் தண்ணீருக்கு அடியில் சேற்றில் அமுக்கி புதைத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்று விட்டதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று மதியம் குழந்தை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்து சுதா மற்றும் கள்ளக்காதலன் யோகலிங்கத்தை கைது செய்துள்ளனர். பிறந்து 24 நான்கு மணி நேரம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை உயிருடன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and forger arrested for murdering infant by burying baby alive in Villupuram


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->