ஈரோடு || டிராக்டரை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம்.. தாய் மகள் பரிதாப பலி..!
Mother and daughter Death in Accident
இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், நரிகாட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் அவரது மனைவி கோமதி மற்றும் மகண் சுருதியுடன் அவர்களின் இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கரும்பு லாரி ஏற்றி சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றனர் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கோமதி, சுருதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother and daughter Death in Accident