#திருநெல்வேலி || மொபட் மீது கார் மோதி விபத்து.! தந்தை, மகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(55). இவரது மகள் ஜான்சி (24). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஜான்சி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தந்தையோடு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பணகுடி காவல் துறையினர், படுகாயமடைந்த அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அய்யப்பன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து போலீசார் ஜான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped car accident in Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->