உருத்தெரியாமல் அழித்துடுவேன் - இஸ்லாமிய பெண் கவுன்சிலரை மிரட்டிய மிசா பாண்டியனை நீக்கிய திமுக தலைமை!
Misa Pandiyan suspended in DMK
மதுரை : இஸ்லாமிய பெண் கவுன்சிலரை உருத்தெரியாமல் அழித்துடுவேன் என்று, திமுக முன்னாள் துணை மேயர் மிரட்டிய மிசா பாண்டியானை, 23 நாள் கழித்து தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர கோரி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலரை, "நீ ஒரு முஸ்லீம்தான, உன்ன தடம் தெரியாம அழிச்சுருவேன்" என்று கொலை மிரட்டல. விடுத்திருக்கிறார் திமுகவின் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன்.

இதுகுறித்த பஞ்சாயத்து திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் உள்ளிட்டவர்களிடம் சென்றுள்ளது. சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
ஆனால், விவகாரம் மீடியாவுக்கு சென்றுவிட்டது. மேலும், இஸ்லாமிய சமூக மக்கள் திமுக தலைமை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

மேலும், சாதாரண மனிதன் இப்படி ஒரு இஸ்லாமிய பெண்ணை, அதுவும் கவுன்சிலரை மிரட்டினால் குற்றவியல் நடவடிக்கை பாயுமா? அல்லது சமரச பேச்சு நடத்துவார்களா? என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்ட தொடங்கிய நிலையில் சுமார் 23 நாள் கழித்து மிசா பாண்டியனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், "மிசா பாண்டியன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம்” என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
English Summary
Misa Pandiyan suspended in DMK