சென்னையில் அதிர்ச்சி: மெட்ரோ ரெயில் கட்டுமான தூண்கள் விழுந்து விபத்து: ஒருவர் பலி..!
One killed as Metro Rail construction pillars collapse in Chennais Ramapuram area
பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல்&டி அருகே மெட்ரோ ரெயில் பணியின் போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் போது மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதையை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 02-ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 03 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
One killed as Metro Rail construction pillars collapse in Chennais Ramapuram area