ஊழல் வழக்கில் "அமைச்சர் பெரியசாமி" மேல்முறையீடு.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக பணிபுரிந்த சண்முகநாதனுக்கு தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாக கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக துறவப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. 

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இதற்கு எதிராக அமைச்சர் பெரியசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே அமைச்சர் பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனது வெங்கடேஷ் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவருக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டு விசாரணத்தை எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister periyasami appeal petition filed in supreme court


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->