தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான டெல்லி அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.  டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ma subramanian press meet about wearing a mask


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->