மேட்டூர் : சேத்துக்குளி பகுதியில் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு.!
Mettur 2 girls drowned in river in Sethukuli area
மேட்டூர் அருகே சேத்துக்குளி பகுதியில் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை அடுத்த சேத்துக்குளி கிராமத்தில் கோடை விடுமுறையை கழிப்பதற்காக சென்னையை சேர்ந்த 4 சிறுமிகள் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமிகள் நால்வரும் தனது பாட்டியுடன் சேர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகள் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளம் இருப்பது தெரியாமல் அங்கு இருக்கும் குழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுமிகளின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mettur 2 girls drowned in river in Sethukuli area