உறுப்பு கல்லூரிகளை நேரடியாக கல்லூரிகளாக மாற்ற அரசாணை வெளியீடு..!    - Seithipunal
Seithipunal


இதுவரை தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக இயங்கிவந்த 41 கல்லூரிகளும் இனிமேல் நேரடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள  41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களை உருவாக்கியும் அதற்கான செலவினங்களுக்கு நிதி வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த அரசாணையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய பத்தாயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை அந்தந்த மண்டல இணை இயக்குநர் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Member Colleges into Direct Colleges in government order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->