பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம், இளைஞர் படுகொலை..! - Seithipunal
Seithipunal


பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள் குணசேவியர். இவருக்கு திருமணமாகி லிதியாமேரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அவரது நண்பரான பிரதீப் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு குணசேவியர் வேடப்பட்டி நாகம்மா கோவில் அருகில் சென்றுள்ளார்.

அப்போது அவர் நண்பர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களுக்கிடையே அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே நண்பர்களில் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள் குணசேவியரை சரமாரியாக குத்தியுள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பிசென்றனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த அருள் குணசேவியரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man murdered in Dindigul


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->