ரயில் நிலையத்தில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலை - மனைவிக் கண்முன்னே நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். 

அப்போது அங்கு மது போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கார்த்திக் உடன் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

அப்போது, அந்த வாலிபர் திடீரென தன் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து கார்த்திக்கின் முகம், கழுத்தில் சரமாரியாக அறுத்து‌விட்டு அப்பகுதியாக வந்த ரயிலில் ஏறி தப்பித்துச் சென்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தன் கணவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் மனைவியுடன் ரயிலுக்காக காத்திருந்த வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man murder in putlur railway station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->