சொத்து தகராற்றால் நேர்ந்த விபரீதம்.. அண்ணனை கொலை செய்த தம்பி..! - Seithipunal
Seithipunal


சொத்துக்காக தம்பியே அண்ணனை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (41). இவருக்கு கதிரவன் என்ற தம்பி இருக்கிறார். இருவருக்கும் இடையில் குடும்ப சொத்தை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சிவகுமாரிடம் அவரது தம்பி கதிரவன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கதிரவன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சிவகுமாரை தாக்கியுள்ளார். இதில், பலத்த    காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார், அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man Killed his own brother near Kanniyakumari


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->