ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


ஆற்றை கடக்க முயன்ற தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாளாந்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் . கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள வெள்ளாற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர், வெள்ளாற்று தண்ணீரில் நீந்தியபடி மறுகரையில் உள்ள ஆயிப்பேட்டை கிராமத்துக்கு செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man drowns in to water near cuddalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->