ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர் - காப்பாற்றச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர் - காப்பாற்றச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனது நண்பருடன் சேர்ந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். இதையடுத்து ரயில் மாம்பலம் - சைதாப்பேட்டை இடையே சென்றுகொண்டிருந்த போது ஆசைத்தம்பி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், ரயில் சைதாப்பேட்டை வந்த உடனே இறங்கி ஆசைதம்பியைக் காப்பாற்ற தண்டவாளத்திலேயே ஓடிச் சென்றனர். அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஆசை தம்பி நண்பர்களில் ஒருவர் மீது மோதியது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் ரெயிலில் இருந்து கீழே விழுந்து காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆசை தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மின்சார ரயில் மோதி உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for accident in cythapet railway track


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->