லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள்.. வீடியோ வெயிட்டு தற்கொலை.. ஈரோடு அருகே பரபரப்பு..!
Man committed suicide Near Erode
லாட்டரியில் பணம் இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அந்த வீடியோவில் தனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் காரணம் என தெரிவித்தார்.
அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை நஷ்டயீடாக பெற்று தனத குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் எனவும் லாட்டரி சீட்டால் பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும் அதனால், லாட்டரி சீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தகாவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Man committed suicide Near Erode