ஆன்லைன் மோசடிக்கு கடும் கட்டுப்பாடு…! 1ம் தேதி முதல் வங்கி பரிவர்த்தனையில் புதிய விதிகள்...! - Seithipunal
Seithipunal


நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த, வங்கி பரிவர்த்தனை முறைகளில் முக்கிய மாற்றங்கள் அறிமுக படுத்தியுள்ளன.
1. பரிவர்த்தனை கண்காணிப்பு
ஒவ்வொரு ஆன்லைன் பண பரிவர்த்தனையும் எந்த இடத்திலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்காணித்து சரிபார்க்கப்படும்.
2. ஓ.டி.பி. முறை மாற்றம்
இனி எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. வராது. நேரடியாக வங்கி செயலியில் (App) தான் பெற முடியும்.


3. ஸ்கிரீன் ஷாட் தடை
வங்கி செயலியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்யவும் அனுமதி இருக்காது.
4. நேர கட்டுப்பாடு (Time Lock)
வாடிக்கையாளர்கள் தாங்களே குறிப்பிட்ட நேரங்களில் (எ.கா. இரவு நேரம்) பண பரிவர்த்தனையை முடக்கலாம்.
5. மோசடி செயலி எச்சரிக்கை
மால்வேர் அல்லது சந்தேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை வரும்.
6. கூடுதல் பாதுகாப்பு கேள்விகள்
பெரிய தொகை (₹50,000+ / ₹1 லட்சம்+) பரிவர்த்தனைகளில் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும்.
7. பயோமெட்ரிக் சரிபார்ப்பு
தட்டச்சு வேகம், பயன்பாட்டு முறை போன்றவற்றின் அடிப்படையில் உண்மையான பயனாளரா என சரிபார்க்கப்படும்.
8. பெரிய தொகைக்கு கூடுதல் பாதுகாப்பு
ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால்:
ஆதார் சரிபார்ப்பு, கைரேகை, முகஅடையாளம், கட்டாயமாக கேட்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strict controls online fraud New rules banking transactions from 1st


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->