தஞ்சாவூர் || காரில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


பூட்டிய காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தஞ்சாவூர் பேருந்து நிறுத்தத்தில் காரில் வாய் , மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் ஆண் சடலம் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஆய்வு ச்செய்த போது அதில் பிளாஸ்டிக் பையில் வேஷ்டி, சட்டை இருந்துள்ளது.


அதனை கைப்பற்றிய காவல்துறையினர்  அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதனை அடுத்து, முதற்கட்ட விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man body Founded in bus stand at car


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->