16 வயது சிறுமியை கர்பமாக்கிய காம கொடூரனை கைது செய்தது காவல்துறை..!!
Man arrested for raping girl
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் 11 வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அப்போது அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கூறியது அவர்களை மேலும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.
கொளகுடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர். அப்போது அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man arrested for raping girl