15 வயது சிறுமியை திருமணம் செய்த கூலித்தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை திருமணம் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் என்.புதூர் நாடுத்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முரளி(37) ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் ரத்னா என்ற பெண்ணின் உதவியோடு பெற்றோரை இழந்து கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் ஊராட்சி ஒன்றிய சுகாதார அலுவலர் தமிழரசி, கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசி அளித்த புகாரின் பேரில் முரளி மற்றும் ரத்னா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து முரளியை கைது செய்த போலீசார் தலைமறைவான ரத்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested for marrying 15 year old girl in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->